ஆலங்குடி பா.ஜ.க. ஒன்றிய குழு கூட்டம்
- ஆலங்குடி பா.ஜ.க. ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் பாஸ்கர் தலைமையி ல் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச்செயலாளர் முரளிதரன், மாவட்ட செயலாளர் மலர்மணி, ஒன்றிய பொதுச் செயலாளர் அரங்குளவன், ஒன்றிய பொதுச்செயலாளர் வெற்றி செழியன், ஒன்றிய பொ ருளாளர் மாரியப்பன் , திருவரங்குளம் ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் பாலமுருகன், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன், ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாடியம்மன் கோவில் ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்தம், வருகின்ற 18-ந் தேதி மாநில தலைவர் வருகையின்போது திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்திலிருந்து அதிக மான நபர்களை அழைத்து வரவேற்பு அளிப்பது, அனைத்து பூத்துக்களிலும் கிளை கமிட்டி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.