- பா.ஜ.க. தேசிய செயலாளர் கைது செய்யபட்டார்
- அவருடன்சென்ற கட்சி நிர்வாகிகள் 13 பேரையும் கைதுசெய்து நாகுடி தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் பா.ஜ.க. சார்பில் பாராளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்தினை தொடர்ந்து கோட்டைப்பட்டினத்தில் உள்ள கட்சி நிர்வாகியை சந்திப்பதற்காக புறப்பட்டு உள்ளார். அதற்கு கோட்டைப்பட்டினம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படு கிறது. அதனையடுத்து வேலூர் இப்ராஹிம்மை அங்கு செல்லக் கூடாது என போலீசார் தடுத்துள்ளனர். ஆனால் தடுப்பையும் மீறி இப்ராஹிம் கட்சி நிர்வாகிகளுடன் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். இப்ராஹிம் சென்றால், கோட்டைப்பட்டினம் கடற்கரையோர கிராம பகுதியில் கலவரம்ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் போலீசார் அவரை பாதி வழியிலேயே தடுத்தி நிறுத்தினர். பின்னர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அவரை போலீ சார் கைது செய்தனர். மேலும் அவருடன்சென்ற கட்சி நிர்வாகிகள்13 பேரையும் கைதுசெய்து நாகுடி தனியார் மண்ட பத்திற்கு அழைத்து சென்ற னர். ேபாலீசார் தடுப்பை மீறிச் சென்ற பா.ஜ.க. தேசிய செயலாளர்வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.