உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டை அருகே ரூ. 34 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட பூமி பூஜை
- அண்டனூர் மணக்குளம், ஆண்டனி வயல் மற்றும் இடுகாடு செல்லும் சாலையில் இணைப்பு பாலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 34 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜையை நடைபெற்றது.
- விழாவில் கந்தர்வக்கோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அண்டனூர் ஊராட்சியில் அண்டனூர் மணக்குளம், ஆண்டனி வயல் மற்றும் இடுகாடு செல்லும் சாலையில் இணைப்பு பாலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 34 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜையை நடைபெற்றது.
விழாவில் கந்தர்வக்கோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன்மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் இளவரசன், அதிமுக ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.