உள்ளூர் செய்திகள்

மது விற்ற முதியவர் கைது

Published On 2022-08-05 11:52 IST   |   Update On 2022-08-05 11:52:00 IST
  • மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்
  • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

புதுக்கோட்டை:

விராலிமலை பகுதிகளில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ஈஸ்வரி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 60) என்பவர் அவரது வீட்டில் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்."

Tags:    

Similar News