உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

Published On 2023-02-07 14:43 IST   |   Update On 2023-02-07 14:43:00 IST
  • கறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது செய்யப்பட்டார்
  • போலீசார் அவரிடமிருந்த 77 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் டாஸ்மாக் கடை அருகே ஒரத்தநாடு தாலுகா சென்னிய விடுதி கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி மகன் ராமமூர்த்தி (வயது 45) என்பவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து அவரிடமிருந்த 77 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கறம்பக்குடி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News