உள்ளூர் செய்திகள்

காரில் கடத்தி வரப்பட்ட 48 கிலோ புகையிலை பொருட்கள்

Published On 2022-10-13 14:36 IST   |   Update On 2022-10-13 14:36:00 IST
  • காரில் கடத்தி வரப்பட்ட 48 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
  • வாலிபரை கைது செய்தனர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிசானத்தூர் விளக்கு ரோடு அருகில் வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கந்தர்வகோட்டையை சேர்ந்த குமார் மகன் கனகவேல் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து 48 கிலோ புகையிலை பொருட்களையும், காரையும் பறிமுதல் செய்து, கனகவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News