உள்ளூர் செய்திகள்
சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது
- சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
- 550 மது பாட்டில்கள் பறிமுதல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் சுதந்திரதினமான நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையை பயன்படுத்தி, முதல் நாளே டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களை சிலர் வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். அவற்றை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அன்னவாசல் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடை மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் அரசு மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட கல்லாங்குடி மணிகண்டன் (வயது 20), மாரப்பட்டி இளங்கோவன் (42), ராமச்சந்திரன், மாறன் (60) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 550 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.