உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் வக்கீல் உட்பட 2 பேர் காயம்

Published On 2022-11-14 08:27 GMT   |   Update On 2022-11-14 08:27 GMT
  • வாகன விபத்தில் வக்கீல் உட்பட 2 பேர் காயம் ஏற்பட்டது
  • காரில் சென்ற போது ஏற்பட்ட சம்பவம்

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ளே சிக்கப்பட்டியை சேர்ந்த குமரேசன் மகன் கன்ராக் (எ) கணேசன் (வயது 31) அரசு வக்கீல். இவர் நேற்று புதுக்கோட்டை நீதிமன்றம் சென்று விட்டு மீண்டும் ஆலங்குடி நோக்கி நண்பர்கள் இருவருடன் காரில் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியும், கணேசன் ஓட்டி சென்ற காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் கணேசன் படுகாயமடைந்தார். இதற்கிடையே அந்த வழியாக கீழக் கரும்பிரான்கோட்டையை சேர்ந்த வடிவேல் மகன் சந்தோஷ் (19) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் அவரும் படுகாயமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News