உள்ளூர் செய்திகள்

மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.


கடையம் அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2022-11-15 09:13 GMT   |   Update On 2022-11-15 09:13 GMT
  • அணைந்த பெருமாள் நாடானூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
  • குவாரியில் வெடிக்கப்படும் வெடிகளால் வீடுகளில் விரிசல் விழுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

கடையம்:

கடையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் மற்றும் அணைந்த பெருமாள் நாடானூர் கிராம பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் தனியார் குவாரி ஒன்றுக்கு மீண்டும் கல் உடைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த குவாரி முன்பு செயல்படும்போது வீடுகளில் விரிசல் விழுந்ததாகவும் குவாரியில் வெடிக்கப்படும் வெடிகளால் கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள், முதியோர் போன்றோர் பாதிக்கப்படுவதாகவும் வீடுகளில் விரிசல் விழுவதாகும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் அழகுதுரை மற்றும் முத்தமிழ் செல்வி ரஞ்சித் ஆகியோர் தலைமையில் வந்து மனு அளித்தனர்.

Tags:    

Similar News