உள்ளூர் செய்திகள்

நாகை பகுதியில் குப்பைகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-03-20 14:43 IST   |   Update On 2023-03-20 14:43:00 IST
  • குப்பைகள் அள்ளப்படாமலும், சாக்கடை நீர் அகற்றப்படாமல் உள்ளது.
  • சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் நகராட்சியில் 36வார்டுகள் உள்ளன இதில் 22 ஆவது வார்டில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் பகுதியில் சேரும் குப்பைகள் அள்ளப்படாமலும் சாக்கடை நீர் அகற்றப்படாமல் தேங்கி கொசுக்கள் உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் குடிநீரும் சரிவர வழங்கப்படுவதில்லை சாலையும் குண்டும் குழியுமாக உள்ளதாகவும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் குற்றம் சாட்டும் பொதுமக்கள் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருக்களில் தேங்கியுள்ள சாக்கடை நீரை அகற்றி சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 22 வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News