உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற எஸ்.பி. ஜவகர்.

இலவச எண்கள் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் - எஸ்.பி.தகவல்

Published On 2022-06-30 07:10 GMT   |   Update On 2022-06-30 07:10 GMT
  • வடக்குபொய்கைநல்லூர் கிராமத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
  • பொதுமக்கள் தங்களது குறைகளை இலவச எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி காவல் சரகம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்

பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், வேளாங்கண்ணி சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News