உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசியை சாலையில் கொட்டிய பெண்கள்.

ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்

Published On 2022-08-01 09:09 GMT   |   Update On 2022-08-01 09:09 GMT
  • இதனால் பொதுமக்கள் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவியது.

நாகப்பட்டினம்:

நாகை நகராட்சி 14 வார்டுக்கு உட்பட்ட காடம்பாடி சவேரியார் கோவில் தெரு பகுதியில் சுமார் 1000 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள 5-ம் எண் அரசு நியாய விலைக்கடையில் வழங்கபடும் அரிசி தரமற்று உணவிற்கு பயன்படுத்த முடியாத நிலையில் வழங்கபடுவதாக கூறப்படுகிறது.

மேலும் பழுத்த சிவப்பு நிற கலர்களில் வண்டுகள் மொய்த்து துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் சமைத்து உண்ணும் போதும் துர்நாற்றம் வீசுவதாகவும் தங்கள் குழந்தைகள் உணவை சாப்பிட முடியவில்லை என்றும் இந்தஅரிசியை வாங்க வேண்டும் என ஊழியர்கள் பொதுமக்களை நிர்பந்தி பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவியது.

எனவே தங்கள் பகுதிக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News