உள்ளூர் செய்திகள்

கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம்- பெண் புரோக்கர் கைது

Published On 2023-08-14 15:22 IST   |   Update On 2023-08-14 15:22:00 IST
  • விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 4 அழகிகளை போலீசார் மீட்டனர்
  • பெண் புரோக்கர் சுபாஷினியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோவை,

கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து செல்வபுரம் போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் போலீசார் மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த பெண் புரோக்கர் கோவை கணபதியை சேர்ந்த சுபாஷினி (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

அங்கு உள்ள அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 4 அழகிகளை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் சுபாஷினியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News