உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

Published On 2023-06-14 14:23 IST   |   Update On 2023-06-14 14:23:00 IST
  • பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
  • கடந்த ஓராண்டிற்கும் மேலாக இலவசமாக பயிற்சி மையம் அமைத்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி பணி செய்து வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நடத்திய 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக இலவசமாக பயிற்சி மையம் அமைத்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி பணி செய்து வருகின்றனர். இதற்கான கல்வி திருவிழா நடைபெற்றது.

விழாவிற்கு ஆசிரியர்கள் லூக்காஸ், ராமசாமி, கார்த்திக், ஆறுமுகச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.ஏ. சூசை, தலைமை ஆசிரியர் மரிய அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை செந்தில்குமாரி வரவேற்று பேசினார். தமிழ் ஆசிரியர் சங்கர் ராம், நகர் மன்ற உறுப்பினர்கள் ராமு ராமர், விஜயகுமார், சந்தனமகாராஜன், இசக்கிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியைகள் முத்துச்செல்வி, மேகலா ஆகியோர் நன்றி கூறினார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சமூக மற்றும் மேம்பட்ட கல்வி வளர்ச்சிக்கான சங்க பொருளாளர் இளையராஜா, ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி, ராஜ், செந்தில்குமார், ஆனந்த், ராமர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News