தமிழ்நாடு செய்திகள்

அரையாண்டு தேர்வு விடுமுறை நாளை தொடக்கம்

Published On 2025-12-23 09:22 IST   |   Update On 2025-12-23 09:22:00 IST
  • அரையாண்டு தேர்வுக்கு 12 நாட்கள் அதாவது நாளை முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரையில் விடுமுறை வழங்கப்பட உள்ளது.
  • விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 5-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.

சென்னை:

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 10-ந்தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்த நிலையில், பிற வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இன்றுடன் தேர்வு நிறைவு பெற உள்ளது.

தேர்வு முடிந்ததும், நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது. பள்ளிக்கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டது போல, அரையாண்டு தேர்வுக்கு 12 நாட்கள் அதாவது நாளை முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதி வரையில் விடுமுறை வழங்கப்பட உள்ளது. விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 5-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.

அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News