தமிழ்நாடு செய்திகள்

'பிப்.28 இல்லை... 2028க்குள் மதுரை எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்' - ராஜன் செல்லப்பா!

Published On 2026-02-06 21:19 IST   |   Update On 2026-02-06 21:19:00 IST
  • விடுதி மற்றும் டைனிங் ஹால் முதல்கட்டமாக ஒப்படைக்கப்படும்.
  • அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் எடப்பாடி பழனிசாமியும், பிரதமரும் இணைந்து திறந்துவைப்பர்.

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வும், மதுரை மாவட்ட அதிமுக மூத்த தலைவருமான வி.வி.ராஜன் செல்லப்பா இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

"கட்டிட பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 2500 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வளவு விரைவாகவும், வேகமாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகள் மார்ச் இறுதியில் முடிவடையும். விடுதி மற்றும் டைனிங் ஹால் முதல்கட்டமாக ஒப்படைக்கப்படும். விமர்சிப்பவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெறுகிறது.



மதுரைக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இந்த எய்ம்ஸ். 2028க்குள் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வாய்ப்பு உள்ளது. நிதிக்கு முதலில் தாமதம் ஆனது. முழுமையாகத் தயாராக உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமரும், அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து திறந்துவைப்பர். " என தெரிவித்தார். 

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கியது. 

பிப்ரவரி 28, அன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகை தந்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளைத் திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் முதற்கட்ட பணிகள் மார்ச் இறுதியில் முடிவடையும் என ராஜன் செல்லப்பா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags:    

Similar News