உள்ளூர் செய்திகள்

முகாமில் ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் பேசினார்.

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

Published On 2022-11-12 10:12 GMT   |   Update On 2022-11-12 10:12 GMT
  • பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அம்மாபேட்டை:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம் நடைபெற்றது.

அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

அனைவரையும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மாபேட்டை வட்டார மருத்துவ அலுவலர் அஜந்தன் உரையாற்றினார்.

முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி., எக்ஸ்ரே உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

முகாமில் அம்மாபேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள்.

மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News