உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டணம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

Published On 2023-08-08 15:12 IST   |   Update On 2023-08-08 15:12:00 IST
  • பெண்ணேஸ்வரடம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண்ணேஸ்வரடம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காவேரிப்பட்டணம் நகரம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூர், தேவர்முக்குளம், பெரியண்ணன் கொட்டாய், தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகர், குண்டலப்பட்டி, கத்தேரி, கருக்கன்சாவடி, மேல்மக்கான், தாலாமடுவு, பனகமுட்லு, தளியூர், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பர்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி, மகராஜகடை, நாரலப்பள்ளி, எம்.சி.பள்ளி, கே.கே.பள்ளி, வள்ளுவர்புரம், பெரிய கோட்டப்பள்ளி, சின்ன கோட்டப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, கீழ் கரடிகுறி, பூசாரிப்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News