உள்ளூர் செய்திகள்

தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்ற காட்சி. 

பொத்தனூர் வெள்ளக்கல் மாரியம்மன்கோவில் தேரோட்டம்

Published On 2023-04-26 08:09 GMT   |   Update On 2023-04-26 08:09 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது.
  • இக்கோவில் தேர் திருவிழா, கடந்த 9-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா, கடந்த 9-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

கடந்த 16-ந் தேதி மறுகாப்பு கட்டுதலும், 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை தினந்தோறும் மாலை சப்பாரம், சிம்ம வாகனம், பூத வாகனம், அன்னபட்சி வாகனம், யானை மற்றும் பூந்தேர் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

23-ந் தேதி மாலை வடிசோறு மற்றும் வெட்டும் குதிரையில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 24-ந் தேதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பொத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று காலை அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தலும், மாலை பொங்கல், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) கம்பம் ஆற்றில் விடுதலும், 28-ந் தேதி காலை மஞ்சள் நீராடலும், மாலை முத்துபல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். 

Tags:    

Similar News