உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் கைதான 2 பேரையும் படத்தில் காணலாம். 

கிளியனூர் அருகே போலீஸ் ரோந்து: ஏரியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது

Published On 2022-10-09 09:20 GMT   |   Update On 2022-10-09 09:20 GMT
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
  • 110 மது பாட்டி ல்கள், 2 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் அருகே புதுவையில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி வந்து பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது மொளச்சூர் ஏரிக்கரை ஓரமாக 2 நபர்கள் மது பாட்டில் விற்பதை பார்த்த னர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 23) பெரியசாமி (25) என்பது தெரியவந்தது. உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 110 மது பாட்டி ல்கள், 2 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News