உள்ளூர் செய்திகள்

யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் மனு வாங்கும் முகாமை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.


வாசுதேவநல்லூரில் பொதுமக்களிடம் மனு வாங்கும் முகாம்

Published On 2023-02-27 09:03 GMT   |   Update On 2023-02-27 09:03 GMT
  • யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டு மனு வாங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.
  • இதில் பொதுமக்களிடமிருந்து 200 மனுக்கள் பெறப்பட்டது.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே கிருஷ்ணன் சமூகநல அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் சட்டரீதியாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், இலவச சட்ட ஆலோசனை, சட்ட உதவிகள் தொடர்பாக பொது மக்களிடம் மனு வாங்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக் கட்டளை நிறுவனத்தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கி னார். விடுதலை கழகம் பாண்டியன், வழக்கறிஞர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டு மனு வாங்கும் முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களிடமிருந்து 200 மனுக்கள் பெறப்பட்டது. ராமகிருஷ்ணன், தங்கம் ஆகியோர் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். முருகன், மணிகண்டன் ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

Similar News