உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற்ற காட்சி.

செங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணா்வு முகாம்

Published On 2022-12-04 14:15 IST   |   Update On 2022-12-04 14:15:00 IST
  • செங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஒருமைச்சாவடி விழிப்புணா்வு கண்காட்சி முகாம் நடந்தது.
  • முகாமை நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

செங்கோட்டை:

செங்கோட்டை வாகை மரத்திடல் காந்தி சிலை முன்பு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில் செங்கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருமைச்சாவடி விழிப்புணா்வு கண்காட்சி முகாம் நடந்தது. நகர்மன்ற தலைவா் ராம லெட்சுமி தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற துணை தலைவா் கணேசன் நகர்மன்ற உறுப்பினா் ராஜ்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனா்.

செங்கோட்டை ஒன்றிய களப்பணியாளா் முத்துலெட்சுமி வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து விழிப்புணா்வு கண்காட்சி முகாமை நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னா் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பணியின் திட்ட ஒருங்கிணைப்பாளா் இசக்கிமுத்து மாற்றுதிறனா ளிகளுக்கு அரசு அளிக்கும் நலத்திட்ட உதவிகள் பெற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள், அடையாள அட்டை பெறுவது எப்படி, சுயதொழில் உபகரணங்கள் பெற செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினார்.

முகாமில் விழிப்புணா்வு காட்சிகள் அடங்கிய பதாகைகள் வைக்க ப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் செங்கோட்டை ஒன்றிய களப்ப ணியாளா் இந்துமதி, மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். அமர்சேவா சங்கத்தின் சிறப்பு பள்ளி ஆசிரியா் ஈஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News