உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர்கள் மாநகராட்சி அலுவலக்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்த காட்சி.

நெல்லை புதிய பஸ்நிலையத்திற்குள் பயணிகளை இறக்கிவிட அனுமதி வழங்க வேண்டும்- மாநகராட்சி அலுலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் மனு

Published On 2022-08-16 09:37 GMT   |   Update On 2022-08-16 09:37 GMT
  • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
  • ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்லை வேய்ந்தான்குளம் பஸ் நிலையம் புதிதாக கட்டப் பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று மேயர் சரவணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர் ஆகியோர் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மேயர், துணைமேயரை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

ஸமார்ட் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்லை வேய்ந்தான்குளம் பஸ் நிலையம் புதிதாக கட்டப் பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 நடை மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பிளாட்பாரத்தில் இருந்து அதிக தூரத்தில் இருசக்கர வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகர்கோவில் செல்லும் பயணிகள் வாகனங்களை காப்பகத்தில் நிறுத்திவிட்டு வெகு தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.

புதிய பஸ்நிலைய பகுதியில் சுமார் 132 ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. பஸ் நிலையத்திற்குள் ஆட்டோக்களை அனுமதிப்பதில்லை.

இதனால் வெளியூர்க ளுக்கு செல்லும் முதி யவர்கள், மாற்று திறனாளிகள் பஸ் நிலைய நுழைவு வாயிலில் இருந்து பிளாட்பாரத்திற்கு சிரமத்து டன் நடந்து செல்கிறார்கள்.

எனவே அவர்கள் நலன் கருதி 5 ஆட்டோக்கள் மட்டும் பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விட அனுமதி வழங்க வேண்டும். நாங்கள் சுழற்சி முறையில் 5 ஆட்டோக்களாக தினமும் சென்று வருவோம்.

இதற்கு மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

தேவையில்லாத கூட் டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், விபத்து அபாயத்தை தடுக்கவும் ஆட்டோக்கள் பஸ் நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News