உள்ளூர் செய்திகள்

வெல்டிங் பட்டறை தொழிலாளி தற்கொலை

Published On 2022-12-19 15:44 IST   |   Update On 2022-12-19 15:44:00 IST
  • வெல்டிங் பட்டறை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
  • தந்தை கண்டித்ததால் விபரீத முடிவு

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை. இவரது மகன் சின்னதுரை(வயது 24). இவர் எசனையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த நான்கு நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திக்கொண்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் சின்னதுரை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சின்னதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News