முதல்வருக்கு பேரளி, குன்னத்தில் சிறப்பான வரவேற்பு
- முதல்வருக்கு பேரளி, குன்னத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
- பெரம்பலூருக்கு வருகை தந்த
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரியலூரில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று மாலை பெரம்பலூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் பேரளி மற்றும் குன்னம் கிராமத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக அதன் ஒன்றிய செயலாளரும் ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என். கிருஷ்ணமூர்த்தி சார்பில் மேலமாத்தூரில் சிறப்பான வரவேற்பு முதல்வருக்கு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.