உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

Published On 2022-11-24 15:33 IST   |   Update On 2022-11-24 15:33:00 IST
  • ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
  • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

பெரம்பலூர்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில் வளர்ச்சித்துறை அலுவலர்களில் மொத்தம் 346 பேரில், 148 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தினால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களிலும், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags:    

Similar News