உள்ளூர் செய்திகள்

பாடாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-12-20 09:38 GMT   |   Update On 2022-12-20 09:38 GMT
  • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
  • பாடாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்

தமிழ்நாடு மின்சார வாரியம் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே மின்சாரம் வினியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என கூறியுள்ளார்.


Tags:    

Similar News