உள்ளூர் செய்திகள்

மெக்கானிக் தற்கொலை

Published On 2023-01-23 13:17 IST   |   Update On 2023-01-23 13:17:00 IST
  • வீட்டில் யாரும் இல்லாத போது சம்பவம்
  • மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சூசை ஸ்டீபன் தேவராஜ் (வயது35). மெக்கானிக்கான இவர் தற்போது பெரம்பலூர் நான்குரோடு மின் நகரில் வாடகை வீட்டில் மனைவி ரூத் இவாஞ்சலின் (21), மகன் தியோ ஸ்டீபன் (1) ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது மனைவி திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மனைவி பணிக்குச் சென்ற பின்னர் வீட்டின் மொட்டை மாடியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் இரும்பு படிக்கட்டின் மேற்பகுதியில் சூசை ஸ்டீபன் தேவராஜ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து ெகாண்டார். இது குறித்து ரூத் இவாஞ்சலின் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News