உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை

Published On 2022-12-01 15:23 IST   |   Update On 2022-12-01 15:23:00 IST
  • விஷம் குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
  • திருமணமாகாத ஏக்கத்தில் சம்பவம்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சாஸ்திரிபுரத்தை சேர்ந்தவர் துரை (வயது 34), கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துரை கடந்த மாதம் 14-ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து (விஷம்) குடித்துவிட்டு அரும்பாவூர் கொட்டாரக்குன்று செல்லும் சாலையோரம் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் துரை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News