உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

Published On 2023-11-17 06:15 GMT   |   Update On 2023-11-17 06:15 GMT
  • பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
  • மாரத்தான் பாலக்கரை , சங்குபேட்டை, கடைவீதி , வானொலி திடலில் முடிவடைந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நல துறை சார்பில் நடந்த பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

சமூகநல அலுவலர் ரவிபாலா தலைமையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் பாலக்கரை , சங்குபேட்டை, கடைவீதி , வானொலி திடலில் முடிவடைந்தது. இதில் 100க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஓடினர்.

Tags:    

Similar News