உள்ளூர் செய்திகள்

மகளிர் உரிமை தொகை பெற வங்கி கணக்கு இல்லாதவர்கள் நீலகிரி கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி கொள்ளலாம் - கூட்டுறவுத்துறை அதிகாரி தகவல்

Published On 2023-07-27 08:49 GMT   |   Update On 2023-07-27 08:49 GMT
  • குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாமல் சேமிப்புக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 21 கிளைகளிலும் இந்த சேமிப்புக் கணக்குகள் தொடங்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மண்டல அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த உரிமைத்தொகை பெற வங்கிக் கணக்கு இல்லாதவா்கள் தற்போது சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்காக வங்கிகளை நாடிச் செல்கி ன்றனா்.அப்படி செல்பவர்க ளுக்கும் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் குறைந்த பட்ச இருப்புத் தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

இதைத் தவிா்க்கும் வகையில் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாமல் சேமிப்புக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வரும் மகளிருக்கு உடனுக்குடன் கணக்கு தொடங்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கியின் தலைமையகம் மற்றும் அதன் 21 கிளைகளிலும் இந்த சேமிப்புக் கணக்குகள் தொடங்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை, ரேஷன் காா்டு ஆகியவற்றின் நகல் மட்டும் எடுத்து வந்தால் போதும். தொகை ஏதும் செலுத்தாமல் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். எனவே பெண்கள் இதனை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி மகளிர் உரிமை திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News