உள்ளூர் செய்திகள்

நடந்து சென்றவர் மீது மோட்டார் பைக் மோதி பலி

Published On 2022-10-11 09:26 GMT   |   Update On 2022-10-11 09:26 GMT
  • சண்முகம் கரூர் சாலையில் ஓரமாக நடந்து சென்றார்.
  • மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

பரமத்தி வேலூர்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57). இவர் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் காவிரி ஆற்றுக்கு செல்வதற்காக பழைய பைபாஸ் கரூர் சாலையில் ஓரமாக நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News