உள்ளூர் செய்திகள்

ெபற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து பயனடைய வேண்டும்-நீலகிரி கலெக்டர் அம்ரித் பேச்சு

Published On 2022-06-17 10:22 GMT   |   Update On 2022-06-17 10:22 GMT
  • பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணா்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
  • தகுதி வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியா்களை கொண்டு மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊட்டியில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணா்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னா் அவா் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தொடா்ந்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு உயா்கல்வி பயில 7.5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு உயா் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

அத்துடன் தகுதி வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியா்களை கொண்டு மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. ெகாரோனா தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு 'எண்ணும் எழுத்தும்' திட்டம் வாயிலாக மாணவா்கள் புரிந்துணா்வு–டன் படிக்கவும், அடிப்படை கணிதத் திறன்களை வளா்க்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை நேரங்களில் மாணவா்களின் கற்றலை மேம்படுத்த 'இல்லம் தேடி கல்வி' திட்டம் மூலம் மாணவா்களின் வீடுகளுக்கு அருகிலேயே தன்னாா்வ–லா்களை கொண்டு வகுப்பு நடத்தப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பல்வேறு ஊக்கத் தொகைகள், விலையில்லா பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள், மடிக்க–ணினிகள், மிதிவண்டி, சீருடைகள், பஸ் பயண அட்டை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, சத்துணவுடன் முட்டை போன்றவை வழங்கப்பட்டு, மாணவா்கள் பள்ளிக்குச் செல்வதும், கல்வி கற்கும் முறையும் ஊக்குவிக்கப்படுகிறது.

எனவே பெற்றோா்கள் தங்களது பள்ளி வயது குழந்தைகள் அனைவ–ரையும் அரசுப் பள்ளிகளில் சோ்த்து அரசால் வழங்கப்ப–டும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேரணியானது சேரிங்கிராஸ், கமா்சியல் சாலை வழியாக மத்திய பஸ் நிலையத்தை சென்ற–டைந்த–து. சுமாா் 75 ஆசிரி–யா்கள் விழிப்பு–ணா்வுப் பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனா். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தாமோதரன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்டக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News