அரசு இசை பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை
- இசை பள்ளியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வந்தனர்.
- பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர்களிடம் வகுப்பு கிடையாது என அறிவித்ததால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர்.
சீர்காழி:
சீர்காழியில் மாவட்ட அரசு இசை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த இசைப் பள்ளியில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் யோகா, பாட்டு, ஓவியம், இசை, பரதம் போன்ற கலைகள் மாணவ- மாணவிகளுக்கு பயிற்றுவித்து வருகின்றனர். இசைப் பள்ளியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட இசை பள்ளி நிர்வாகம் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த பயிற்சி வகுப்புகளை திடீரென நிறுத்திவிட்டு திங்கள், செவ்வாய் கிழமை களில் மாலைநடை பெறும் என அறிவித்து நடத்தி வருகிறது.
இந்நிலை யில் திங்கட்கிழமை பயிற்சி வகுப்புகளுக்கு மாணவ- மாணவிகளை அழைத்து வந்த பெற்றோர்களிடம் இன்று வகுப்பு கிடையாது என திடீரென அறிவித்ததால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்து இசைப்பள்ளியை முற்றுகையிட்டு போரா ட்டம் நடத்தினர். இதனால் இசைப்பள்ளி அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினர்.