உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி நாகாத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பண்ருட்டி நாகாத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

Published On 2022-06-24 10:15 GMT   |   Update On 2022-06-24 10:15 GMT
  • பண்ருட்டி நாகாத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • 10 மணியளவில் சிம்ம லக்னத்தில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி செக்குமேட்டு தெருவில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு நாகாத்தம்மன் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான யாகசாலையில் யாகசாலை பூஜை நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்றது.

இன்று காலை இரண்டாம் கால பூஜை நாடி சந்தானம் தத்துவார்ச்சனை,மகா பூர்ணாஹூதி,யாத்ரா தானம் செய்யப்பட்டு9 45 மணிக்கு கடம் புறப்பட்டு திருக்கோவிலை வலம் வந்து 10 மணியளவில் சிம்ம லக்னத்தில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இன்று இரவு அம்மன் வீதிஉலா காட்சி நடைபெறவுள்ளது/ இதற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா கோவிந்தசாமி முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் ,நாகாத்தம்மன் ஆலய விழா குழுவினர், செக்குமேடு வீதி நகரவாசிகள் ஆலய குருக்கள் சேகர் சிவம் இதற்கான ஏற்பாடு களை சிறப்பாக செய்திருந்தனர்

Tags:    

Similar News