உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தபா.ம.க. பிரமுகர் 2 பேர் கைது

Published On 2023-07-28 09:18 GMT   |   Update On 2023-07-28 09:18 GMT
  • பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.
  • ஆராய்ச்சிகுப்பம் கிரா மத்தை சேர்ந்த பா.ம.க. பிர முகர் சேட்டு மகன் ராம் குமாரை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியில் நேற்று முன்தினம் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர். இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி சேதமானது. இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் டிரைவர் பழனி பண்ருட்டிபோலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பார் வை யிட்டு விசாரணை நடத்தினர்.

புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கியவர் முத்து நாராயணபுரம் கிரா மத்தை சேர்ந்த முத்தையன் மகன் விஜயசேகர் (வயது 25) என்பது தெரியவந்தது. இதைய டுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் பா.ம.க. வை சேர்ந்த வர் ஆவார். இதேபோல் பண்ருட்டி அருகே பாவைக்குளம் பகு தியில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த ஆராய்ச்சிகுப்பம் கிரா மத்தை சேர்ந்த பா.ம.க. பிர முகர் சேட்டு மகன் ராம் குமாரை (37) காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்

Tags:    

Similar News