உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

ஊதியூர் பள்ளி மாணவி சாதனை

Published On 2022-11-21 09:51 IST   |   Update On 2022-11-21 09:51:00 IST
  • தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை நடத்தும் மாநில அளவிலான கலை பண்பாட்டு திருவிழா.
  • அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவிதா.

திருப்பூர்:

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை நடத்தும் மாநில அளவிலான கலை பண்பாட்டு திருவிழா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்றது.விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஊதியூரை அடுத்துள்ள தாயம்பாளையம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவிதா கலந்துகொண்டு, மாநில அளவில் 3 ம் இடம் பிடித்துள்ளாா்.வெற்றிபெற்ற மாணவி ஜீவிதாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா்தண்டபாணி, ஓவிய ஆசிரியா் ரவி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

Tags:    

Similar News