உள்ளூர் செய்திகள்

கோவையில் மேலும் 2 போலீஸ்நிலையங்கள் திறப்பு

Published On 2023-06-06 09:21 GMT   |   Update On 2023-06-06 09:21 GMT
  • தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்
  • சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும் - போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

சூலூர்,

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 4 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்தநிலையில் சூலூர் மற்றும் கோட்டூரில் புதிய மகளிர் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

இந்த 2 புதிய மகளிர் போலீஸ் நிலையங்களை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

சூலூரில் நடந்த மகளிர் போலீஸ் நிலைய திறப்பு விழாவில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டார். போலீஸ்நிலையத்தை டி.எஸ்.பி. ைதயல் நாயகி ரிப்பன் வெட்டி திறந்தார். போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் பிரமுகர்கள் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாரா யணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சூலூர் காவல் நிலையத்தில் எண்ணற்ற வழக்குகள் மகளிர் சார்ந்து வருவதால் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தற்போது அங்கு செல்ல வேண்டியது இல்லை. சூலூரில் தொடங்கப்பட்டு உள்ள மகளிர் காவல் நிலையத்திலேயே தீர்வு காணலாம்.

அனைத்து உட்கோட்டத்திலும் விரைவில் மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்படும். அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் சைபர் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும். மகளிர் எந்த நேரத்திலும் மகளிர் காவல் நிலையங்களை அணுகி சைபர் தொடர்பான குற்றங்களுக்கு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன், கண்ணம்பாளையம் பசுபதி, சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ், தி.மு.க. கோவை மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் செல்வகுமார், சூலூர் பேரூராட்சி உறுப்பினர் விஜயகுமார், பாஜக மகளிர் மாவட்ட அணி தலைவர் ரேவதி, பொருளாளர் கார்த்திகேயினி, கண்ணம்பாளையம் பேரூராட்சி உறுப்பினர் பத்மநாபன், மகளிர் அமைப்பு தன்னார்வலர் வெற்றிச்செல்வி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சூலூர் மகளிர் போலீஸ் நிலையம் கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர், சுல்தான்பேட்டை, செட்டிப்பாளையம் உள்ளிட்ட 6 போலீஸ்நிலையங்களை உள்ளடக்கி இருக்கும். 

Tags:    

Similar News