உள்ளூர் செய்திகள்

செஞ்சிஅருகே விபத்தில் ஒருவர் பலி

Published On 2023-06-04 07:15 GMT   |   Update On 2023-06-04 07:15 GMT
  • ஆலம்பூண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று காசிேவல் சென்ற மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
  • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

விழுப்புரம்:

செஞ்சிஅருகே உள்ள பரதன் தாங்கல் என்ற ஊரை சேர்ந்தவர் காசிவேல் (வயது 51). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஆலம்பூண்டிக்கு சென்று விட்டு மீண்டும் பரதன்தாங்கல் வந்து கொண்டி ருந்தார். அப்போது செஞ்சியில் இருந்து ஆலம்பூண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று காசிேவல் சென்ற மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த காசிவேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த காசிவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி உஷா கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News