உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரத்தில் வேனில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது
- கீழம்பி பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அரிசி கடத்திய வேனை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்தபோது அதில் 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டைகளில் 1.25 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வேனை ஓட்டி வந்த டிரைவர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.