ஏற்காடு மலைப் பாதையில் பழுதான சாலைகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு
- ஒரு நாள் முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.
- அதன் பின்பு தற்காலிகமாக சாலை சீரமைப்பு செய்யப்பட்டு மலை பாதையில் போக்கு வரத்து தொடங்கப்பட்டது.
ஏற்காடு:
ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலைப் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்றப்பட்டு ஒரு நாள் முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்பு தற்காலிகமாக சாலை சீரமைப்பு செய்யப்பட்டு மலை பாதையில் போக்கு வரத்து தொடங்கப்பட்டது.
இதை தொடர்ந்து கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகளை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பாதிப்படைந்த தடுப்புச்சுவர்களுக்கு திட்ட மதிப்பீடு செய்யவும், மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய சாலை பராமரிப்பு குறித்தும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் துரை, ஏற்காடு உதவிக் கோட்டப் பொறியாளர் பிரபாகரன், உதவிப் பொறியாளர் ராஜேஷ்குமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் செல்வராணி ஆகியோர் உடன் இருந்தனர்.