உள்ளூர் செய்திகள்

கலெக்டர் கார்த்திகேயன்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி களிமண்ணால் ஆன சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்- கலெக்டர் கார்த்திகேயன் அறிவிப்பு

Published On 2023-09-14 09:20 GMT   |   Update On 2023-09-14 09:20 GMT
  • நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.
  • ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைத்திட உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு, பசுமை தீர்ப்பாய உத்தரவு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தின் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படை யில் விநாயகர் சதுர்த்திக்கு நீர்நிலைகளில் கரைக்கும் வகையில் சிலைகளை வைக்க விரும்புவோர் நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத களிமண் உள்ளிட்ட இயற்கை பொருட்களால் செய்யப் பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட ரசாயன பொருட் களால் செய்யப்பட்ட மற்றும் ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைத்திட உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

எனவே கூனியூர், காருக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்களால் செய்யப்படக்கூடிய நீர்நிலைகளை பாதிக்காத வகையிலான விநாயகர் சிலைகளை, சிலை வைப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறும், ரசாய னத்தால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு இதில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News