உள்ளூர் செய்திகள்

ஓசூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-25 15:10 IST   |   Update On 2022-11-25 15:10:00 IST
  • ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு ஓசூர் ஒன்றிய தலைவர் திம்மா ரெட்டி தலைமை தாங்கினார்.
  • சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஓசூர்,

ஓசூர் வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஓசூர் பகுதியில் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உடனடி யாக சிகிச்சை வழங்க கோரியும், நோயினால் இறந்த ஆடு, மாடுகளுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணாசிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு ஓசூர் ஒன்றிய தலைவர் திம்மா ரெட்டி தலைமை தாங்கினார். சி.பி.எம். கட்சியின் மாநகர செயலாளர் சி.பி.ஜெய ராமன், ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி, ஆகியோர் கண்டனவுரையாற்றினர். இதில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News