உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற முதியவர் கைது

Published On 2022-07-20 10:24 GMT   |   Update On 2022-07-20 10:24 GMT
  • மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • கஞ்சா விற்று கொண்டிருந்த கீழவாசலை சேர்ந்த காதர் உசேனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை கீழவாசல் பழைய மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த கீழவாசலை சேர்ந்த காதர் உசேன் (வயது 70) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News