உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே சொத்தை எழுதி தரகேட்டு மூதாட்டியை தாக்கிய மகன்

Published On 2022-09-20 08:21 GMT   |   Update On 2022-09-20 08:21 GMT
  • களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70).
  • அவரது 3-வது மகன் இசக்கிப்பாண்டிக்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70). இவருக்கும், அவரது 3-வது மகன் இசக்கிப்பாண்டிக்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

இந்த தகராறில் ஏற்கனவே இசக்கிமுத்து, சண்முகத்தாயையும், இசக்கிபாண்டி, தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர்கள் களக்காடு போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிபாண்டியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகத்தாய் அங்குள்ள புரோட்டா கடை முன்பு நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கிப்பாண்டி சொத்தை எனக்கு எப்போது எழுதி தருவாய் எனக் கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது தாயாரான சண்முகத்தாயை தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூதாட்டியை தாக்கிய மகனை தேடி வருகிறார்.

Tags:    

Similar News