உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் 17-ந் தேதி மக்கள் குறைதீர்ப்பு முகாம் கலெக்டரின் செயலர் அறிவிப்பு

Published On 2023-08-14 09:23 GMT   |   Update On 2023-08-14 09:23 GMT
  • ஒவ்வொரு மாதமும், 15-ந் தேதி, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
  • வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணவேண்டுகிறோம்.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்ட கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு மாதமும், 15-ந் தேதி, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் நாளை 15-ந் தேதி சுதந்திரதினம் விடுமுறை என்பதால், அன்றைய தினம் நடைபெறவேண்டிய மக்கள் குறைதீர்ப்பு முகாம், இம்மாதம் 17-ந் தேதி நடைபெறும். முகாமில், வழக்கம் போல், அனைத்து அரசுத்துறை அதிகாகள் முன்னிலையில், கலெக்டர் குலோத்துங்கன் காலை 9.30 மணி முதல், பிற்பகல் 10 மணி வரை மக்கள் குறைகளை கேட்பார். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணவேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News