உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்து இருந்த வடமாநில வாலிபர் கைது

Published On 2023-08-06 15:57 IST   |   Update On 2023-08-06 15:57:00 IST
  • போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
  • போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஓசூர்,  

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போதை தடுப்பு பிரிவு போலீசார் மத்திகிரி பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

இதில் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த நரேன் தர்மன் (வயது38) என்ற வாலிபர் கையில் வைத்திருந்த பையில் 800 கிராம் கஞ்சா மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News