- அதிக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
- மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே தாழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வடமலை. இவரது மனைவி அங்காளம்மாள் (வயது 21). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகிறது. குழந்தைஇல்லாததால் அங்காளம்மாள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும், மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டதால் அதிக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும்கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் மன ம்உடைந்த அங்காளம்மாள் முந்திரி தோப்பில்தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குதீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அங்காளம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் மலர் கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.