நெல்லை மாநகர கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் நியமனம்
- தலைமை இடத்து துணை கமிஷனராக அனிதாவும் பணியாற்றி வருகிறார்.
- ஆதர்ஷ் பச்சேரா சென்னையில் சொத்து உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் மாநகரமானது நெல்லை மேற்கு, நெல்லை கிழக்கு என இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றங்கள் தடுக்கப்பட்டு வருகிறது.
காலி பணியிடம்
அதன்படி நெல்லை மாநகர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக சரவணகுமார் இருந்து வருகிறார். கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக சீனிவாசன் பணி யாற்றனார். அதே போல் தலைமை இடத்து துணை கமிஷனராக அனிதாவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பதவியிடம் காலியாக இருந்தது. அந்த பொறுப்பை தலைமை இடத்தை துணை போலீஸ் கமிஷனர் அனிதா கவனித்து வந்தார்.
துணை கமிஷனர் நியமனம்
இதற்கிடையே காலியாக இருந்த போலீஸ் துணை கமிஷனர் பதவிக்கு உடனடியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பி னரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி தற்போது நெல்லை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக ஆதர்ஷ் பச்சேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில் சொத்து உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் நெல்லை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.