உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2022-08-23 06:11 GMT   |   Update On 2022-08-23 06:11 GMT
மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தனி பிரிவு தலைமை போலீசார் சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு 2 மாட்டு வண்டிகள் வந்தது.

இதை பார்த்த போலீசார் உடனே 2 மாட்டு வண்டிகளை பிடிக்க முயன்றனர். போலீசார் வருவதை கண்டவுடன் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், அய்யனார் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News